கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
நிர்மூலம்
——/-
காலத்தின் வேகம் கடமை உணர்வின் தாகம்
ஞாலத்தின் கோலம் ஞாயிறோனால் போகம்
பாலத்தின் அமைப்பு அதுபாதுகாப்பு
நிலைப்பு
ஏலத்தின் முடிவு எடுத்துக் கொள்ளவிரைவு
அதனால் எங்கள். வளமும்
கொள்ளையினால் நிர்மூலம்
கட்டிக்காத்த மரபுகள் மண்ணின் உறவுகள்
விட்டுப்போக காரணம் விடியலில்லா
நிர்மூலம்
கடிகள்தான் பெருந்தொல்லை காப்பதற்கு காவலனும்
இங்கில்லை
கட்டவிழ்த்த கடிவாளமும் நிர்மூலமாய்
உற்றவர் உறவினர் உடலும் போரிலே
உடைந்த மனதுடன் கதியற்ற நிரமூலம்
வாழிடமின்றி வாழ்வுமனை நிர்மூலம்
போக வழியுமின்றி போகுமுடமும் நிர்மூலம்
ஏதிலிகளான ஏழைகளுக்கு எல்லாமே நிர்மூலம்
நிர்மூலமாகிப் போன வாழ்வில்
ரணகளமான பரிவேந்தல்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
20.5.24

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading