16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_159
“வலி”
வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரை
வலி சுமந்து
தேடும் உறவுகள்
உடன் பிறப்புக்கள்!
ஊர் கூடி
உறவு கூடி
கொந்தளித்து என்ன பயன்?
பாப்பார் கேட்பார்
யாரும் இல்லை!
வெள்ளை கொடியுடன் சென்ற
வெண்புறாக்கள் எங்கே?
கையில் கொடுத்த பிள்ளைகள்
கைமாறி போனதேனோ?
எத்தனை ஆண்டுகள்
கடந்தாலென்ன நினைவுகளை
மனதில் சுமக்கும் வலி!
மனிதன் மிருகமாகி
மனிதனை
மனிதன்
வேட்டையாடி
மானிடனை சுட்டெரித்து
மாந்தரை துன்புறுத்தி!
பெண்களை
வன்கொடுமைக்கு உட்படுத்தி
வலி மேல் வலி கொடுத்து
வேதனை சோதனை பார்க்க முடியல்லயே!
ஏன் இந்த
கொடுர
வலியை கொடுக்கும்
கோளைகளுக்கு
மரணதண்டனை கொடுக்கல்லேயே
கோர நயவஞ்சகர்
கொடுரமாய்
வலி சுமக்கட்டும்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
07.09.24
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...