பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 268 ]
“பெண்மை”

பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் என்பர் சான்றோர்.
பெண்ணே பிறக்கும்போது குறையேதுமின்றிப்பிறந்தாய்
பிறந்தமனை, கலாச்சாரம், சூழலால் வளர்நிலையிலுள்ளாய்
பெண்மையின் பெருமையைப் பேயென்பார் சிறுமதியார்

கற்பெனும் நிறைகலன்பூண்டோர் நெஞ்சினில் நிலைப்பார்
புறஅழகே மேன்மையெனத் தடுமாறும் நாகரீகமணியே
தாய்மை அழகைவெல்ல வேறேது அழகு இவ்வுலகில்?
மகப்பேறும் தாய்பாலூட்டுதலும்இயற்கையின் அழகே!

மலரிலும் மென் மையைப்பெண்மை என்பதுண்மை
மலரைக்கசக்கிட முனையின் விடுவாய் உயிரை
புலிகளின் ஆட்சியில் அனுபவித்தாய் சுதந்திரத்தின் எல்லை
இல்லறத்தை நல்லறமாக்கும் இனிய வாழ்க்கைத்துணை

“மாதராய்ப்பிறந்திடவே நல்ல மாதவம் செய்திடவேண்டும்”
பெண்ணேஎன்றும் நீயடையவேண்டும் வாழ்க்கையில்பெருமை.
“பெண்ணிற்பெருந்தக்கயாவுளகற்பெனுந்திண்மையுண்டாக்கபெறின்”
அன்றேயுரைத்தவர் பொய்யாமொழியார்

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading