” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 170 “மறுபிறவி”

மரணத்தைக் கண்டு மருண்டிடும் மனிதா
மரணம் ஒரு நாள் வந்தே தீரும் அஞ்சுதல் வேண்டா
உடல் என்பது உயிர் காவும் வெறுங்கூடு
அழிவில்லாத்து ஆன்மா, அழிவது உடல், கண்கூடு

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் மாந்தர்
பிறவாமை வேண்டின் பற்றது நீக்கி பரமனைப் பணிவாய்
ஆன்மா, மறுபிறவி வலியுறுத்தும் கீழைத்தேய மதங்கள்
சைவம் சமணம் பௌத்தம் மறு ஜென்மக்கோட்பாட்டில் அடக்கம்

கிரேக்க ஞானியர் பிளாட்டோ, அரிஸ் டோட்டில்,பைதகோரஸ்
மறுஜென்மக் கோட்பாட்டினை ஆய்ந்து போதனை செய்தோர்
எகிப்தியர் கட்டிய பிரமிட் மறுபிறவி உண்டென வலியுறுத்தும்
விஞ்ஞானமும் அறிவியலும் வளர வளர மறுபிறவி உண்மைகள் நிரூபணமாகும்.

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan