” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

துறவு பூண்ட உறவுகள்

துறவு பூண்ட உறவுகள்…விண்ணவன் – குமுழமுனை (25)
*~***~*
கண்களில் கண்ணீர்
வழிகிறது – நெஞ்சமோ
ஆறுதல்தேட ஒரு தோழ்
கிடைக்காதா என ஏங்கிடும் நிலை

வார்த்தைகளில் நம்பிக்கை தந்து
இறுதியில் கைவிட்டுவிட்டு
செல்லும் சில
உறவுகளை நான்
என் சொல்லட்டும்

உறவுகளை உடனிருக்க
நிர்பந்திப்பதா இல்லை
விலகி செல்ல இடமழிப்பதா
புரியவில்லை

இக் கலக்கத்திலே
நானோ தள்ளாடிக்
கொண்டிருக்கும்
தருமோ துறவு பூண்டு
சென்றனவே சில உறவுகள்….
*~***~*
விண்ணவன் – குமுழமுனை

Author: