நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பூமி 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
28-10-2025

ஓயாமல் சுழலும் கோளம்
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி உயிர்களின் இருப்பிடம்
கொடுக்கின்றாய் தீரா நல்வளம்!

விதையென விழுந்தால் விருட்சமும்
வீணாகிப் போனால் பசளையும்
பச்சைப் போர்வை போர்த்தி,
பஞ்சமின்றி எம்மைக் காத்து

அடர்ந்த காடெல்லாம் அழகு
அமைதியாய் ஓடும் நதியழகு
வர்ணப் பூக்கள் அழகு
வான்மழை மேகமும் அழகு

நிலக்கரி, தங்கம், நிதிகளென நிலத்தினுள் பல வரங்களென
உயிர்களின் பசியும், உறக்கமும்
உனது இயக்கத்தில் அடக்கமும்

இயற்கை வளத்தை அளிப்பவளே
எதிர்கால சந்ததி சிறப்பதற்கென
வீட்டிற்கு ஒரு மரம் நாட்டி
வீண் அழிவுகளை அகற்றி பூமி காப்போம்.

Jeba Sri
Author: Jeba Sri