மௌனத்தின் மொழி 74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 23-10-2025 பேச்சை இழந்த பின் பேசாத அத்தியாயம் அலையற்ற கடலாய் அமைதியின் நிலையாய் மௌனத்தின் மொழியாய் மனங்களின் உரையாடலாய் சொல்லமுடியாமல்...

Continue reading

நூலும் வேலும்

நகுலா சிவநாதன் வேலும் நூலும் வேரின் கூர்மையும் நூலின் அறிவும் வேண்டும் வாழ்விற்குத் தேவை என்றுமே! வேரின் கூர்மை அசுரரை அழித்து மக்களைக் காத்ததே நூலின்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

ச.சி.ச

வலி

வருங்காலத்தை எண்ணியெண்ணி அனுதின ஏக்கங்கள்
வருந்துயரில் உளத்திலும் உடலிலும் தாக்கங்கள்
வலிகள் அனைவரது வாழ்க்கையிலும் உண்டுதான்
வழிகள் அடைபடவே பலரிங்கே கலங்குவதுமேன்

கேள்விக்குறியாக உள்ள கைவிடப்பட்டோரின் எதிர்காலம்
மூழ்கும் கப்பலென அந்தரித்த கோலம்
அனாதைகளாக இவரை யார்தான் படைத்தார்
வினாவிது விடையிருந்தால் அறிந்தவரும் யார்யார்

எளியவரை விடாமல் விரட்டுகின்ற வறுமை
வழியின்றி உதவியின்றி வாடுவதும் கொடுமை
மேல்தட்டு கீழ்த்தட்டென ஆக்கப்பட்ட உலகம்
பாழ்பட்ட வாழ்வினரின் துன்பமெப்போ விலகும்

ஒருவேளை உணவுக்காக ஒருபக்கம் போராட்டம்
அருந்தியுண்டு களிப்பவர்கள் மறுபக்கம் கொண்டாட்டம்
துயரங்களை சுமந்துகொண்டு நகருகின்ற ஒருசாரார்
உயரங்களில் இருந்துகொண்டு ஈயாதோரையும் பாரீர்

ஜெயம்
09-09-2024

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பூமி தன்னைத்தானே சாமியாய்ச் சுற்றிச் சுற்றி சுழல்கிறதே வானமோ ஊற்றும் பனிப்புகாரில் பற்றி தலை முழுகுகிறதே ஈரந் துவட்டாததிலே ஜலதோஷ வடிநீரோ மழையாகப்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் அந்திப் பொழுது... வான் சிவந்து மெய்யெழுதும் வையமே அழகொளிரும் களிப்பிலே மனமொளிரும் காந்தமென புவி சிரிக்கும் மலரினங்கள் மையல்...

    Continue reading

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading