30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
ஜெயம் தங்கராஜா
ச.சி.ச
வலி
வருங்காலத்தை எண்ணியெண்ணி அனுதின ஏக்கங்கள்
வருந்துயரில் உளத்திலும் உடலிலும் தாக்கங்கள்
வலிகள் அனைவரது வாழ்க்கையிலும் உண்டுதான்
வழிகள் அடைபடவே பலரிங்கே கலங்குவதுமேன்
கேள்விக்குறியாக உள்ள கைவிடப்பட்டோரின் எதிர்காலம்
மூழ்கும் கப்பலென அந்தரித்த கோலம்
அனாதைகளாக இவரை யார்தான் படைத்தார்
வினாவிது விடையிருந்தால் அறிந்தவரும் யார்யார்
எளியவரை விடாமல் விரட்டுகின்ற வறுமை
வழியின்றி உதவியின்றி வாடுவதும் கொடுமை
மேல்தட்டு கீழ்த்தட்டென ஆக்கப்பட்ட உலகம்
பாழ்பட்ட வாழ்வினரின் துன்பமெப்போ விலகும்
ஒருவேளை உணவுக்காக ஒருபக்கம் போராட்டம்
அருந்தியுண்டு களிப்பவர்கள் மறுபக்கம் கொண்டாட்டம்
துயரங்களை சுமந்துகொண்டு நகருகின்ற ஒருசாரார்
உயரங்களில் இருந்துகொண்டு ஈயாதோரையும் பாரீர்
ஜெயம்
09-09-2024
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...