“நல்லுறவு”

சந்த கவி
இலக்கம்_215
சிவாஜினி சிறிதரன்

“நல்லுறவு”

பொறுமை சகிப்பு தன்மை
இரண்டும்
தெய்வீக குணங்கள்
இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது நல்லுறவுக்கு!

மூவின மக்கள்
மூவகை மதங்கள்
மூன்று கலாச்சாரத்தில் போட்டி
வேண்டாம்!

கூடி வாழ்வதே
கோடி புண்ணியம்
கூட்டு சேர்ந்து
நல்லுறவாய்
வாழ்வோம்!

வாழ்ந்த காலம் கூட
இருக்கும் காலம் குறைவு
உற்ற நட்பாய்
உயிர் தோழியாய்
உடன் பிறவா
உடன் பிறப்பாய்
நல்லுறவுடன் பயணிப்போம்!

நன்றி வணக்கம் 🙏

Author: