மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவிதை இல(53) 27/03/22
தலைப்பு
உறவு
———
உறவுக்கு உயிருண்டு
உயிரைக் கொடுக்கும் பற்றுண்டு
உறவுக்கு சிறகுண்டு தூரப் பறந்து
துணையாகும் மனமுண்டு

அன்னையாய் தந்தையாய் பிள்ளையாய்
நெருக்கமாய் வளருமுறவு வாழ்வினுக்காய்
சோதரனாய் சோதரியாய் கூடி யங்கே
அரவணைப்பில் ஏங்குவதும் பாசத்திற்காய்

உள்ளங்களை இணைக்குது உறவுப் பாலமாய்
பல பல விதமாய் உருவாகுது உறவு எம்மிலே
பண்பாடு தவறாத வாழ்க்கை முறை
என்றென்றும் சிறப்புண்டு உறவுக்கு

உறவுக்கும் பிரிவுண்டு
உயிர் நீங்கினும் மதிப்புண்டு
உறவுக்கு நிகர் உறவே
உரிமையும் கடமையும் அதுவே

உறவின்றி உயிரில்லை உலகினிலே
குறைகள் யாவும் மறையும் தூய அன்பினிலே
மறைகள் கூறும் உரைகளன்பு வளர்வதற்காய்
நிறைவுண்டு இறையன்பில் நித்தியமாய்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading