மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாவீரர்கள் மரணம் காண்பதில்லை

ஜெயம்

நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர் விழுந்தது உடலால் மட்டுமே
அவர் வீரமோ வரலாற்றை எட்டுமே

எரிமலைக்கு சமமான பூகம்பத் துளியாய்
குறிபார்த்து தாக்குவதில் பாய்கின்ற புலியாய்
உயிரைக்கூட புன்னகையுடன் அர்ப்பணிப்பார்
உயர்ந்த நோக்கத்துடன் உறுதியாய் பயணிப்பார்

சீவனைவிட உயர்ந்தது தேசத்தின் மண்ணென
காவல் தெய்வங்கள் காத்தாரே கண்ணென
நாம் இருக்கிறோம் வேண்டாமே பயமென
தாம் இருந்தாரே இனத்துக்கு தயவென

மலரொன்றும் அங்கே துப்பாக்கி ஏந்தியது
கலங்காது எதிரியை பலமோடு தாக்கியது
தாய்மண்ணை காப்பாதற்காய் தமைக்கொடுக்கும் ஒப்பந்தம்
மாய்ந்தும் மரணிக்கா மாவீரர் சொந்தம்

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading