விடுப்பு..!!

விடுப்பு விடுமுறை பயணம் நன்றாய் அமைய வேலைப் பழுவும் கொஞ்சம் அதிகரிக்க ஆலயங்கள்திருவிழா அயலில் கொண்டாட அலுப்பு இன்றியே நானும் நகர்ந்திட உடலும் கொஞ்சம் உற்சாக பெற்றிட தண்ணீர்...

Continue reading

மாவீரர்கள் மரணம் காண்பதில்லை

ஜெயம்

நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர் விழுந்தது உடலால் மட்டுமே
அவர் வீரமோ வரலாற்றை எட்டுமே

எரிமலைக்கு சமமான பூகம்பத் துளியாய்
குறிபார்த்து தாக்குவதில் பாய்கின்ற புலியாய்
உயிரைக்கூட புன்னகையுடன் அர்ப்பணிப்பார்
உயர்ந்த நோக்கத்துடன் உறுதியாய் பயணிப்பார்

சீவனைவிட உயர்ந்தது தேசத்தின் மண்ணென
காவல் தெய்வங்கள் காத்தாரே கண்ணென
நாம் இருக்கிறோம் வேண்டாமே பயமென
தாம் இருந்தாரே இனத்துக்கு தயவென

மலரொன்றும் அங்கே துப்பாக்கி ஏந்தியது
கலங்காது எதிரியை பலமோடு தாக்கியது
தாய்மண்ணை காப்பாதற்காய் தமைக்கொடுக்கும் ஒப்பந்தம்
மாய்ந்தும் மரணிக்கா மாவீரர் சொந்தம்

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading