நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.01.23
ஆக்கம்-89
புதிர்
புதருக்குள் ஒழிந்த புதிரான புதிர்
புரியாத புதிராய் வாழ்வில் பல
வினாவிற்கு விடை தெரிந்தும்
தெரியாததாய் பல கஷ்டங்களில்
மரணத்துக்குட்படுதே

வளரும் வயதிற்கேற்ப அனுபவ
பாடங்கள் பக்கம் பக்கமாய்
பல ரணங்களாகுதே

குழந்தை பிறந்து வளரும் பருவமதில்
பெற்றோர் விட்டுக் கொடுப்பு
அதிகமானதே
வாலிபம் எட்டியதும் வளமைக்கு மாறான
எதிரும் புதிருமான பதிலில் இளம்
சமுதாயத்திற்கும் பெற்றோருக்குமுள்ள
இடைவெள் நீளமாகுதே

திருமண வயது குட்டியதும் வேணடாத
வினைகள் முட்டி கொண்டதே கோலமென
தீய பழக்கம் புகுந்த வாழ்வோ புரியாத
புதிராக மனதில் கனக்கின்றதே

Nada Mohan
Author: Nada Mohan