ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

22.11.22
ஆக்கம்-84
கனவு மெய்யப்பட வேண்டும்

நினைவு உய்யப்பட்டு உமிழ் நீர் நனைக்கிறது
கனவு மெய்யப்பட வேண்டுமென்று
மனமோ உரத்துக் கனைக்கிறது

எங்கோ பிறந்து வளர்ந்து
இங்கே வந்து தங்கினோம்
வந்த இடத்தில் எல்லாமிருந்தும்
நிம்மதியின்றி ஏக்கமே கனக்கிறது

அந்த நாள் ஞாபகம் எந்த மூலையிலும்
சொந்த பந்தமும்,கூட்டுக் குடும்பமும்
கூடிக் குலாவியதும் நினைக்கிறது

எப்போ சொந்த மண் விடுதலையாகும்
அப்போ இந்த மண் துறந்து
பிறந்த மண் பறந்திட
இக் கனவு மெய்யப்பட வேண்டுமே.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading