மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

துளிநீர்….
ஆறாய் நதியாய் குளமாய் ஊற்றாய்
அருவி பாயுது நிலத்தில் வீச்சாய்
அச்சம் களைந்து தாகம் போக்கும்
நீரின் ஊற்றே நிறைந்த செல்வம்

சுத்தம் பேணும் சுகாதாரம் வாழும்
நித்தம் நீரே நிரம்பி வழியும்
பயிரின் வீச்சில் பசுமை நிறையும்
பாரே நீரால் பசிந்தாய் மலரும்

காரின் பிரசவம் துளியாய்ச் சிந்தும்
வானின் வருகை வளத்தைப் பெருக்கும்
ஞாலம் ஒளிர நற்கொடை நீரே
நாளும் வாழ நன்கொடை நீரே
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading