அதிகாலை விடியல்..

சிவதர்சனி. இராகவன்
வியாழன் கவிதை..2157

அதிகாலை வேளையிலே..
அசதியான தூக்கம் கலைக்கும்
அழகான அதிகாலை வேளை
கண்விழிக்கச் சொல்லும்
குருவிகள் பாட்டொலி
பட்டுத்தெறிக்கும் நிலவொளி
பக்குவமாய் வீழும் பனித்துளி
வானம் கொள்ளும் துயரம்
மெல்ல இருள் சூடிக்கொள்ளும்
மின்மினியாய் விண்மீன்கள்
கண்ணடித்துக் காதலிக்கும்
பூக்கள் மலர ஆயத்தமாகும்
பூமி விடியலை அணைத்து நிற்கும்..
சிவதர்சனி இராகவன்
29/5/2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading