அது ஒரு கனாக்காலம்

ரஜனி அன்ரன் (B.A) “அது ஒரு கனாக்காலம்“ 07.08.2025

அதுஒரு கனாக்காலம் அழகிய நிலாக்காலம்
அறுவராய் ஒன்றுகூடி மகிழ்ந்தகாலம்
பொறுப்புக்கள் எதுவுமின்றி
கவலைகள் துன்பமின்றி
களிப்போடு வாழ்ந்தகாலம் !

அன்பு பாசம் நேசம் சேர்ந்து
உயிரின் இசையைப் பாடியகாலம்
உறவுகளின் மகிழ்வில் திளைத்தகாலம்
நினைவுகளின் கோர்வையில் பூத்தகாலம்
பூங்காற்றுத் தாலாட்ட
முற்றத்து வெண்மணலில் கூடியிருந்து
பாய்விரித்து பால்நிலாவை ரசித்தபடி
வாய்நிறையக் கதைகள் பேசியகாலம் !

நிஜம்உறங்க கனவுகளில் மிதந்தகாலம்
வார்த்தை ஜாலங்களால் கட்டிய கனவிற்கு
வானமே வளைந்து சாயல் கொடுத்தகாலம்
கனவுகள் எல்லாம் நிஜமாகுமா?
அந்தக் கனாக்காலம் ஓடிவிட்டது
நிழல்போல ஞாபகங்கள் மட்டும்….எஞ்சியபடி !

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading