அது ஒரு கனாக்காலம்

ரஜனி அன்ரன் (B.A) “அது ஒரு கனாக்காலம்“ 07.08.2025

அதுஒரு கனாக்காலம் அழகிய நிலாக்காலம்
அறுவராய் ஒன்றுகூடி மகிழ்ந்தகாலம்
பொறுப்புக்கள் எதுவுமின்றி
கவலைகள் துன்பமின்றி
களிப்போடு வாழ்ந்தகாலம் !

அன்பு பாசம் நேசம் சேர்ந்து
உயிரின் இசையைப் பாடியகாலம்
உறவுகளின் மகிழ்வில் திளைத்தகாலம்
நினைவுகளின் கோர்வையில் பூத்தகாலம்
பூங்காற்றுத் தாலாட்ட
முற்றத்து வெண்மணலில் கூடியிருந்து
பாய்விரித்து பால்நிலாவை ரசித்தபடி
வாய்நிறையக் கதைகள் பேசியகாலம் !

நிஜம்உறங்க கனவுகளில் மிதந்தகாலம்
வார்த்தை ஜாலங்களால் கட்டிய கனவிற்கு
வானமே வளைந்து சாயல் கொடுத்தகாலம்
கனவுகள் எல்லாம் நிஜமாகுமா?
அந்தக் கனாக்காலம் ஓடிவிட்டது
நிழல்போல ஞாபகங்கள் மட்டும்….எஞ்சியபடி !

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading