” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அது ஒரு கனாக்காலம்

ரஜனி அன்ரன் (B.A) “அது ஒரு கனாக்காலம்“ 07.08.2025

அதுஒரு கனாக்காலம் அழகிய நிலாக்காலம்
அறுவராய் ஒன்றுகூடி மகிழ்ந்தகாலம்
பொறுப்புக்கள் எதுவுமின்றி
கவலைகள் துன்பமின்றி
களிப்போடு வாழ்ந்தகாலம் !

அன்பு பாசம் நேசம் சேர்ந்து
உயிரின் இசையைப் பாடியகாலம்
உறவுகளின் மகிழ்வில் திளைத்தகாலம்
நினைவுகளின் கோர்வையில் பூத்தகாலம்
பூங்காற்றுத் தாலாட்ட
முற்றத்து வெண்மணலில் கூடியிருந்து
பாய்விரித்து பால்நிலாவை ரசித்தபடி
வாய்நிறையக் கதைகள் பேசியகாலம் !

நிஜம்உறங்க கனவுகளில் மிதந்தகாலம்
வார்த்தை ஜாலங்களால் கட்டிய கனவிற்கு
வானமே வளைந்து சாயல் கொடுத்தகாலம்
கனவுகள் எல்லாம் நிஜமாகுமா?
அந்தக் கனாக்காலம் ஓடிவிட்டது
நிழல்போல ஞாபகங்கள் மட்டும்….எஞ்சியபடி !