மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே

ஜயிரண்டு திங்கள் ஆனந்தமாய் சுமந்து

அயராது எமக்கு அமுதமுலை கொடுத்து

அன்பினாலே அகம்மலர அணைத்து ஆரத்தழுவி

இப்புவியில் எம்மை இனிதாய் வளர்த்ததாயே

அன்னைக்கு நிகரும் வேறுண்டோ பாரில்
நல்லவை சேரவும் நல்லறிவு தந்ததும்
சொற்சுவை காட்டியும் சுதந்திரமாக நிற்க்கவைத்தது

கற்கையை உணர்த்தியும் காலத்தில் நற்பணியுணர்த்தியும்

பொற்புடன் நடக்க வைத்த தெய்வமன்றோ

கோமாதா எங்கள் குலமாதாவை மறக்கலாமா

கருணையின் பிறப்பும் தாய்மையின் சிறப்பும்

தாலாட்டும் நிலையில் பாராட்ட வைத்தவள்
அன்னைக்கு நிகருண்டோ

அகலத்தில் வேறு தெய்வமும் உண்டோ

அவனியிலே அழகுடன்
அருட்கொடை ஆக்கியவள்

அலைமேவும் கலைமகளாய் அலைமகளாய் மலைமகளாக்கி

துயர்போக்கிய தாயவளின் செயல் திறனை

விலைகூறி விற்கலாமா
அவளிற்கு நிகருண்டோ

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading