“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே “

கருணை எனும்
பொருள் நிறைந்த
அட்சய பாத்திரம்
அகராதியில் எதுவும் இல்லை
அன்னைக்கு நிகர்
கருவாகி கால் பதியும் வரை
சுமை ஏற ஏற
சுகம் என்று சொல்கின்ற குரல்
அன்னைக்கு நிகர் உண்டு அதில்

ஆயிரம் தடை எதிர்
கொண்ட போதும்
அம்மாவின் கை ஒன்று போதும்
துயர் களையும் நிதம்
நம் ஆளுமைக்கு அவர்
எந்நாளும் முதல்
ஆண்டாண்டு காலங்கள்
புரண்டோடி போனாலும்
நம்மோடு நடமாடும் நகல்
அன்னைக்கு நிகர் அவனியிலே எதுவும் இல்லை

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading