05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே…….
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே..கவி…ரஜனி அன்ரன் (B.A) 09.05.2024
உயிர்தந்த தாயும்
உலகைக் காட்டிய தந்தையும்
என் வாழ்வின் பொக்கிசங்கள்
நிஜ உலகின் தெய்வங்கள்
நித்திலத்தின் முத்துக்கள்
பெரு வரமாய் கிடைத்த மகுடங்கள்
நிகரென்று சொல்வதற்கு
எதுவுமில்லை அவனியிலே !
தன்னம்பிக்கையின் பெரு விருட்சமாக
தன்னலமற்ற தியாகியாக
அர்ப்பணிப்பின் தேவதையாக
படைப்பின் சக்தியாக அவளே அரசாட்சி
இமயமாய் நாம் உயர – தன்னை
உபயம் செய்தவள் அன்னையே
அன்னைக்கு நிகரென்று ஏதுமில்லையே !
தொப்பூழ்க் கொடியில் நேசத்தைக் காட்டி
மழலைப் பருவமதில் மடியினில் சுமந்து
பள்ளிக் காலமதில் பற்பல கருமங்களாற்றி
பருவ வயதினில் பெருமிதம் கொண்டு
கடைசி வரைக்கும் நெஞ்சினில் சுமந்த
அன்னைக்கு நிகரென்று ஏதுமில்லை
அவனியில் அன்னை ஓர் அதிசயமே !
Author: Nada Mohan
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...