அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக.. 18.01.2022

பாமுக பூக்கள்
பாரினில் பாக்கள்
பூமுகம் மலர்ந்திட
பூத்ததே ஆக்கமொன்று

சந்தம் சிந்தியதே
சாதனை படைத்ததே
சொந்த நூலாகி
சுவர்க்கத்தில் சேர்த்ததே

முத்தான சொத்தாகி
முதல் பூக்கள் பூத்தன
வித்தாகி பாமுகத்தில்
விளைந்தே சொரிந்தன

வாரம்தோறும் வாழ்த்துவாகை
வகைவகையாய் சூட்டியே
தோரணக் கோர்வைகள்
தோப்பாகி நின்றன

அர்ப்பமென எண்ணியவை
அதிசயமாய் நிகழ்ந்தன
கர்ப்பமான கனவுகள்
கரம்வந்தே மகிழ்ந்தன

பூவிலகில் பூத்திட்ட
புன்னகை பூக்களே
மூவுலகும் போற்றிடும்
முதன்மை பாக்களே

அதிபருடன் கவிப்பாவை
அண்ணாவின் பெரும்பங்கில்
கதிரென விளைந்தே
களத்தில் நிறைந்தன..

நன்றி வணக்கம்🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading