பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -268

தலைப்பு ! “பெண்ணே”
……
அழகியலின் படைப்பே – காதல்
ஆண்கவரும் உயிர்ப்பே
பழகுவதில் இனிப்பே – நீ
பகையென்றால் நெருப்பே!

மானுடத்தின் பெண்ணே – நீ
மனிதநேயக் கண்ணே!
ஊனுடம்பைப் பெற்றாய்- எனை
உயிருகப் பெற்றாய்

ஆதியில்நீ உயர்ந்தாய் – பின்
அடுப்படியில் கிடந்தாய்
வாதிட நீ மறந்தாய் – நின்
வாழ்வில்தகுதி இழந்தாய்!

வலிமைகுன்றி நடந்தாய் – தலைவர்
வரவால்புலியாய் எழுந்தாய்!
அலைகடல்நீந்திக் கழித்தாய் – பகை
அரக்கன்கப்பலை உடைத்தாய்!

எதற்குமஞ்சாத் துணிச்சல் – நீ
எதிலும்போடு எதிர்நீச்சல்
முதற்குமுதலாய் இருப்பாய் – நீ
முத்தமிழ்த்தாயின் இருப்பாய்!

அறிவியல்உலகில் முயற்சி – நீ
அனைத்திலும் செய்வாய்ப் புரட்சி!
அறிவெனுமாய்தம் தூக்கு – உன்
அன்னைமண் விடுதலையாக்கு!

எத்துறையாயும் கற்றிடு – பெண்ணே
எதிலும்முதன்மைப் பெற்றிடு !
வித்தெனக்கருத்தரை ஆற்றிடு! – பெண்ணே
விடுதலைமுற்றிலும் பெற்றிடு!

— அபிராமி கவிதாசன்
04.05.2024

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading