29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
இது எல்லாம் இப்ப எங்கே?
சிவருபன் சர்வேஸ்வரி
இது எல்லாம் இப்ப எங்கே…?
சுதந்திரக் காற்றே தூதுபோ கொஞ்சம் //
நிரந்தரம் இல்லாத நிமிடங்கள் கோடி //
வசிப்பிடம் அற்ற வாழ்விடங்கள் பலதும் //
இப்படியே ஆட்டம் பறந்து கொள்கின்றது //
எப்போதெல்லாம் மனிதம் சிறக்குமோ தெரியாது //
அன்றுபோல் இன்றில்லையே வாழ்வுகளின் மலர்வு//
பரபர விறுவிறு சடசட படபட இரட்டைக் கிழவியாட்டம் //
நடநட நடவென நாட்டிலே எங்கோர் மூலையிலே //
பந்தம் பாசம் பறந்து கடந்த உறவுகள் //
ஒண்ணாய் இருந்து ஒரு குழையல் சாதம் உண்பதும் உண்டா//
ஊமையாய் இருந்து உழன்று திரியும்காலமே //
இது எல்லாம் எப்போவருமோ ஏக்கமே //
இன்னிலை என்று தணியுமோ எதிர்பார்ப்பே //
இலைமறைகாயாய் அகமதில் இடிக்கும் எண்ணமே //
தலைமுறை கண்டு தளராமல் நிற்கவே வருவாயே //
நிலமையில் என்றும் நிதர்சனமாய் நிம்மதியே //
வலம்வருமா இது எல்லாம் இப்போது நடக்குமா //
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...