இராசையா கௌரிபாலா

ஏறு போல் நட
———————
கூரிய கண்ணில் கர்வம் கொண்டே
நேரிய அவன்சொல் நன்நெறி காக்கும்
வீரியமாய் நெஞ்சும் வளையாத பாங்கும்
பேரினைச் சொல்லும் பேராளன் காளையென்று

அறமதைப் பேணும் ஆடவனாய் நற்றலைவன்
மறமதைப் புரிந்து மரித்திடத் துணிவுடன்
புறமதில் குத்தாத போர்வாழ் கொண்டே
இறப்புடன் வீரன் இறவா வரத்துடனே

நற்பண்பு கொண்டே நாணிலம் போற்றிட
கற்பாக ஏற்றுக் காத்திடும் அரசன்
பற்றாளன் என்றே பறைசாற்றி நிற்கும்
விற்பன்ணன் ஏறுபோல் வையத்தில் வாழ்வான்.

இலண்டனிலிருந்து
இராசையா கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading