ஈர் இருபத்திரண்டாய்…

வசந்தா ஜெகதீசன்
அடுக்குயர்ந்த மாடிகள் அடையாளப் பதிவுகள்
சான்றுரைத்து நிமிர்ந்த நின்று
சாலவும் சிறப்புரைத்த
யாழ்நூலகமே
ஈர் இருபத்திரண்டாண்டாய்
அனலாகி அழிந்ததே
அறிவாலயம் எரிந்ததே
துட்டர்கள் செயலாலே
துயர்தந்த வதையிது
வரலாற்று நூல்கள் வகை வகையான படைப்புகளும்
தமிழின் தன்மையை தாங்கிடும்
ஏட்டுசுவடிகளும் எண்திசை பதிவுகளும் தாங்கிய கூடமே
தமிழர் வரலாற்றுத் தேட்டமே
நூலகப் படுகொலையாய்
நுண்ணறிவுப் பெட்டகமே
சிதைக்குள் சிதைந்த கணம்
சீரணிக்க முடியாது சிந்தையே வெந்தது
உலகையே உலுக்கிய
உணர்வின் கோரம் கல்வியின் அழிப்பே எதிரிக்குச் சாரம்
வலியால் துடித்தோம் வரலாறு புதைத்தோம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading