” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஈர் இருபத்திரண்டாய்…

வசந்தா ஜெகதீசன்
அடுக்குயர்ந்த மாடிகள் அடையாளப் பதிவுகள்
சான்றுரைத்து நிமிர்ந்த நின்று
சாலவும் சிறப்புரைத்த
யாழ்நூலகமே
ஈர் இருபத்திரண்டாண்டாய்
அனலாகி அழிந்ததே
அறிவாலயம் எரிந்ததே
துட்டர்கள் செயலாலே
துயர்தந்த வதையிது
வரலாற்று நூல்கள் வகை வகையான படைப்புகளும்
தமிழின் தன்மையை தாங்கிடும்
ஏட்டுசுவடிகளும் எண்திசை பதிவுகளும் தாங்கிய கூடமே
தமிழர் வரலாற்றுத் தேட்டமே
நூலகப் படுகொலையாய்
நுண்ணறிவுப் பெட்டகமே
சிதைக்குள் சிதைந்த கணம்
சீரணிக்க முடியாது சிந்தையே வெந்தது
உலகையே உலுக்கிய
உணர்வின் கோரம் கல்வியின் அழிப்பே எதிரிக்குச் சாரம்
வலியால் துடித்தோம் வரலாறு புதைத்தோம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan