உணர்வு

உணர்வு செல்வி நித்தியானந்தன்
உணர்வுகள் பலவுண்டு
உச்சக்கட்டம் ஆவதுண்டு
உளத்தால் தெளிவுகண்டு
உலகில் வாழ்தல் நன்று

மற்றவர் உணர்வை
மதிக்கா ஜென்மம்
மாக்களாய் நினைத்து
மிதிக்கும் வன்மம்

சாக்கடை சகதியில்
சல்லாபம் ஒருபுறம்
சாமிவேடம் தரித்து
சண்டித்தனம் மறுபுறம்

உணர்வை புரிந்து
தெளிவாய் வாழ்ந்து
உலகே போற்ற
உருப்படியாய் வாழ்

செல்வி நித்தியானந்தன்

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading