” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பொங்குவாய் 96

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-01-2025

அன்பு நிறைந்து அறத்தால் பகிர்ந்து
இன்பம் மலர இதயத்தால் பொங்குவாய்
துன்பம் களைந்து துணிவே பிறந்து
வெற்றி நெருங்கப் பொங்குவாய்!

அறிவைத் தேடும் ஆர்வத்தோடு
அகிலம் போற்ற பொங்குவாய்
நெறிகள் தவறி நடப்போர் கண்டு
நெருப்பாய் நீயும் பொங்குவாய்

உழைப்பின் வியர்வை உடலில் நிறைய
ஊதியம் சிறக்க பொங்குவாய்
உணர்வு புரியா மாந்தரிடையே
உரிமை கேட்டு பொங்குவாய்

மூதாதையரின் இயற்கை மருத்துவம் முடங்கியதால் பொங்குவாய்
முதியவர்கள் எல்லாம்
முதியவர் காப்பகத்தில் அடங்கியதால் பொங்குவாய்.

Jeba Sri
Author: Jeba Sri