நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பொங்குவாய்

சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும் உரக்கச்சொல் உண்மை
ஊருலகம் கேட்கட்டும் உன்சொல்
இறுதிவரை வென்றிடவே பொங்கு
ஈனர்கள் ஒழிந்திடவே பொங்கு!
பொங்கிஎழு பொங்கிஎழு மனிதா
பார்வைக்கும் என்றேதான் பாரில்
சங்கல்பம் செய்திடவே சொல்வோம்
சரமாரி வேட்டுக்கள் வேண்டாம்
பங்காளி மகனாக மாறி
பாசமுடன் திறப்போமே வாசல்
மங்காத சுடரெனவே மிளிர்ந்து
மனிதமும்தான் விளங்கணுமே எங்கும்!

Author: