உணர்வு

ராணி சம்பந்தர்

ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே

அறிவில் அடைத்த சிந்தனை
தங்கிப் புழியும் புரிந்துணர்வு
முக்கித் தக்கி உடைக்குமதன்
விழிப்புணர்வு உருவாகிடுமே

ஆளிற்காள் வேறுபடும் அன்பு,
பொறுமை, விட்டுக் கொடுப்பு,
உதவிடும் மனசு பருவம் தேறி
ஊறிய உணர்வு கருவாகிடுமே

பாழாய்ப்படுத்தும் முற்கோபம்,
ஆணவம் தேளாய்க் குத்தியே
சூழும் சுழல் காற்றில் சிக்கிட
பாழுங்கிணறில் அமுக்கிடுமே

குற்றுணர்வின் மன உழைச்சல்
விரக்தி மனப்பான்மை அமைதி
குலைக்கத் துடிக்கும் இதயமோ
தெருவில் சருவாகித் தூக்கிடுமே

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading