உயிர்க்குமா சுவடுகள் ?

ரஜனி அன்ரன் (B.A) உயிர்க்குமா சுவடுகள் ? 21.08.2025

மண்ணுக்குள் புதைத்த துயரம்
மனிதப் பேரவலத்தின் எச்சம்
சாட்சியின் வித்தொன்று சாற்றுது உண்மைகளை
கனக்குதுமனசு கடக்குது காலம்
உயிர்க்குமா சுவடுகள் உரைக்குமா நீதியை?
௨ணர்த்துமா உண்மையின் தடயங்களை?

எச்சங்கள் கண்டுபிடிப்பு ஏராளம்
வெளிச்சத்திற்கு வந்ததுஆதாரம்
சின்னஞ்சிறிய எலும்புக்கூடு சிறியகாலணி
கனவினைச் சுமந்த புத்தகப்பை
கையோடு அணைத்த பொம்மை
தோண்டத் தோண்ட எச்சங்கள்
ஆண்டுகள் இருபத்தொன்பதும் கடந்ததே
மாண்டவர்தான் மீண்டு வருவாரா?

உடலங்கள் எரிக்கப்படும் மயானத்தில்
புதைகுழியில் புதைக்கப்பட்ட மர்மம்தான் என்ன?
எச்சங்களின் சாட்சியங்கள் தீர்வினைக் கொடுக்குமா?
நீதிதான் உதிர்க்குமா? நியாயம்தான் பிறக்குமா?
ஐ.நா.மன்றே பதில்சொல்லு ஐக்கியத்தை நியாயப்படுத்து !

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading