28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
உயிர்க்குமா சுவடுகள் ?
ரஜனி அன்ரன் (B.A) உயிர்க்குமா சுவடுகள் ? 21.08.2025
மண்ணுக்குள் புதைத்த துயரம்
மனிதப் பேரவலத்தின் எச்சம்
சாட்சியின் வித்தொன்று சாற்றுது உண்மைகளை
கனக்குதுமனசு கடக்குது காலம்
உயிர்க்குமா சுவடுகள் உரைக்குமா நீதியை?
௨ணர்த்துமா உண்மையின் தடயங்களை?
எச்சங்கள் கண்டுபிடிப்பு ஏராளம்
வெளிச்சத்திற்கு வந்ததுஆதாரம்
சின்னஞ்சிறிய எலும்புக்கூடு சிறியகாலணி
கனவினைச் சுமந்த புத்தகப்பை
கையோடு அணைத்த பொம்மை
தோண்டத் தோண்ட எச்சங்கள்
ஆண்டுகள் இருபத்தொன்பதும் கடந்ததே
மாண்டவர்தான் மீண்டு வருவாரா?
உடலங்கள் எரிக்கப்படும் மயானத்தில்
புதைகுழியில் புதைக்கப்பட்ட மர்மம்தான் என்ன?
எச்சங்களின் சாட்சியங்கள் தீர்வினைக் கொடுக்குமா?
நீதிதான் உதிர்க்குமா? நியாயம்தான் பிறக்குமா?
ஐ.நா.மன்றே பதில்சொல்லு ஐக்கியத்தை நியாயப்படுத்து !
Author: ரஜனி அன்ரன்
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...