-எல்லாளன் வாரம்162

நிழல் தேடும் தமிழன்
ஆதரவு பறவைகட்கு கூடு
அதிலுறங்கும் ஆணோடு பேடு
சீதளத்தில் காலநிலை மாற-எங்கும்
சென்றடையும் தம் உணவு தேட
கூதலுக்கு தன்னைக் காக்க பாம்பு
கொண்டுளது புற்று எனும் கூம்பு
ஆல மரமாம் தமிழன் ஊரில்-இன்று
அலைகின்றான் நிழல்தேடி பாரில்.
**
பசுஞ்சோலை வீடு வளவு காணி
படலையில் சங்கடப் படலை பேணி
தெருவாலே போவோர் களை தாகம்
தீர்ப்பதிலே கொண்டிருந்தம் மோகம்
வருவோரை உபசரிக்கும் பண்பு
வைத்திருந்தான் தமிழன்தான் கொண்டு
பரிதவிக்கும் இனக் கொடுமையினால் யாலே-இன்று
பாரெங்கும் நிழல்தேடு றானே.
**
பாலைவனம் ஆதி யாழ்ப் பாணம்-பாணன்
பரிசு பெற்ற தமிழர் நல் ஸ்தானம்
சோல் வனம் அவன் உழைப்பி னாலே-துலா
தோண்டி அள்ளும் ஆழ நீரை தானே
கோல எழில் பண்பு நிறை பூமி-எங்கும்
கொண்ட தெங்கள் பள்ளி கோயில் சாமி
ஆள வந்தான் சிங்களத்து ஆமி-மண்ணை
ஆக்கிர மிக்கின்றார் பெளத்த காவி.
**
ஆயுதத்தில் நம்பிக்கை தொடர்ந்து-இடையே
அமைதி முயற்சி களையும் கடந்து
சூழ்நிலையோ உலகமெங்கும் மாற
நாமோ
தொடர்ந்தும் அதே வழியில் போ ராட
ஓரணிக்குள் பிளவுகளும் சேர -இலக்கில்
ஒன்றி நின்ற போர் அணிகள் ஓய
போர்நெறியை சிங்களமும் மீற
புதைந்ததுவே போர் வீறும் ஆழ.
**
வாள் வெட்டு,போதை வஸ்து திருட்டு-எங்கள்
வளவுகளும் எம்மவரால் பறிப்பு
ஆள் கடத்தல் கப்பம் கை லஞ்சம்
அத்தனைக்கும் ஊரில் இல்லை பஞ்சம்
ஆளும் தமிழ் கட்சிக்குள் உள் பூசல்
ஆளுக்கால் பதவி வெறி சாடல்
போதுமடா ஈழ ஆசை சாமி -காப்போம்
புகலிடத்தில் அடையாளம் பேணி.”

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading