தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு “இதயம்”. எனக்கென்றோர் இதயம்
இனிய அன்பு பதியம்
தனக்கு வரும் நலதை
தரும் எனக்கு நிதமும்.

இணையான அவட்கு
இதமான அணைப்பு
மண நாளின் முதலாய்
மனம் தருமே தொடராய்.

மனையிலுள்ள பணிகள்
மலர முகம் புரிவாள்
நினைவில் தன் கனவில்
நிறுத்தி மகன் மகளை

குடும்பம் தன் உயிராய்
குறி வாழ்வில் நெறியாய்
உருகும் அவள் இதயம்
உள்ளங்களை கவரும்.

இந்த அவள் இயல்பே
எனை கவர்ந்த நிலையே
வந்தமர்ந்த காதல்
வளர்ந்து மனை அறமாய்.

என் இதய கமலம்
இருப்பே என் பலமும்
இல்லாத பொழுதில்
இல்லமே இருளும்.
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading