அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

எழுத்தாளர் வாரம்

செல்வி நித்தியானந்தன்
எழுத்தாளர் வாரம் ( 718)

எழுத்தாளர் வாரமும்
எழிலாய் வந்திடுமே
எண்ணும் எழுத்தும்
எழுகைக்கு உரமாமே

எண்ணச் சிறகுதனை
எழுத்திலே பதியட்டும்
ஏற்றம் கண்டும்தான்
ஏட்டிலே விரியட்டும்

ஆண்டுகள் இருபத்தியெட்டு
ஆயிரமாய் படைப்புக்கள்
அவனியிலே தனித்துவமாய்
அடியெடுத்த பா முகமாய்

எண்ணிய வலிகளெல்லாம்
ஏக்கத்தின் நினைவலைகள்
ஏற்றத்தாழ்வு இல்லை
ஏகபோகமாய் சிறகடிக்குதே

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading