எழுத்தாளர் வாரம்

செல்வி நித்தியானந்தன்
எழுத்தாளர் வாரம் ( 718)

எழுத்தாளர் வாரமும்
எழிலாய் வந்திடுமே
எண்ணும் எழுத்தும்
எழுகைக்கு உரமாமே

எண்ணச் சிறகுதனை
எழுத்திலே பதியட்டும்
ஏற்றம் கண்டும்தான்
ஏட்டிலே விரியட்டும்

ஆண்டுகள் இருபத்தியெட்டு
ஆயிரமாய் படைப்புக்கள்
அவனியிலே தனித்துவமாய்
அடியெடுத்த பா முகமாய்

எண்ணிய வலிகளெல்லாம்
ஏக்கத்தின் நினைவலைகள்
ஏற்றத்தாழ்வு இல்லை
ஏகபோகமாய் சிறகடிக்குதே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading