அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

ஒப்பிலாத்தெய்வம்..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2149..!

ஒப்பிலாத்தெய்வம்..

ஒப்புவமை இல்லாதாள்
அன்னை எனும் தெய்வம்
இப்பூவுலகில் நமை ஈன்ற
அன்னை எனும் தையல்..

கண்ணுக்குள் காத்திடுவாள்
கலங்கரை விளக்கமாகிடுவாள்
புலருகின்ற காலையின்
கதிரொளி இவளாகிடுவாள்..

இல்லையென்று சொல்லாது
இருப்பதைப் பகிருவாள்
இன்முகம் காட்டியே தன்
பிள்ளை பசி ஓட்டிடுவாள்..

நடனாடும் இறை வடிவே
நாட்டமுள்ள சக்தி உருவே
படைப்பின் சாமி இவளன்றோ
பார் வியக்கும் தாய்மை அல்லோ..

இயங்கு நிலை இவள் செயல்
இணங்கி வாழ்தல் குணமது
கருவறை தந்த சாமியாம்
கருணையோடு காத்திடுவோம்..
சிவதர்சனி இராகவன்
15/5/2025

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading