” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஒப்பிலாத்தெய்வம்..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2149..!

ஒப்பிலாத்தெய்வம்..

ஒப்புவமை இல்லாதாள்
அன்னை எனும் தெய்வம்
இப்பூவுலகில் நமை ஈன்ற
அன்னை எனும் தையல்..

கண்ணுக்குள் காத்திடுவாள்
கலங்கரை விளக்கமாகிடுவாள்
புலருகின்ற காலையின்
கதிரொளி இவளாகிடுவாள்..

இல்லையென்று சொல்லாது
இருப்பதைப் பகிருவாள்
இன்முகம் காட்டியே தன்
பிள்ளை பசி ஓட்டிடுவாள்..

நடனாடும் இறை வடிவே
நாட்டமுள்ள சக்தி உருவே
படைப்பின் சாமி இவளன்றோ
பார் வியக்கும் தாய்மை அல்லோ..

இயங்கு நிலை இவள் செயல்
இணங்கி வாழ்தல் குணமது
கருவறை தந்த சாமியாம்
கருணையோடு காத்திடுவோம்..
சிவதர்சனி இராகவன்
15/5/2025

Nada Mohan
Author: Nada Mohan