கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

ஒப்பிலாத்தெய்வம்..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2149..!

ஒப்பிலாத்தெய்வம்..

ஒப்புவமை இல்லாதாள்
அன்னை எனும் தெய்வம்
இப்பூவுலகில் நமை ஈன்ற
அன்னை எனும் தையல்..

கண்ணுக்குள் காத்திடுவாள்
கலங்கரை விளக்கமாகிடுவாள்
புலருகின்ற காலையின்
கதிரொளி இவளாகிடுவாள்..

இல்லையென்று சொல்லாது
இருப்பதைப் பகிருவாள்
இன்முகம் காட்டியே தன்
பிள்ளை பசி ஓட்டிடுவாள்..

நடனாடும் இறை வடிவே
நாட்டமுள்ள சக்தி உருவே
படைப்பின் சாமி இவளன்றோ
பார் வியக்கும் தாய்மை அல்லோ..

இயங்கு நிலை இவள் செயல்
இணங்கி வாழ்தல் குணமது
கருவறை தந்த சாமியாம்
கருணையோடு காத்திடுவோம்..
சிவதர்சனி இராகவன்
15/5/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading