நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

ஒப்பிலாத்தெய்வம்..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2149..!

ஒப்பிலாத்தெய்வம்..

ஒப்புவமை இல்லாதாள்
அன்னை எனும் தெய்வம்
இப்பூவுலகில் நமை ஈன்ற
அன்னை எனும் தையல்..

கண்ணுக்குள் காத்திடுவாள்
கலங்கரை விளக்கமாகிடுவாள்
புலருகின்ற காலையின்
கதிரொளி இவளாகிடுவாள்..

இல்லையென்று சொல்லாது
இருப்பதைப் பகிருவாள்
இன்முகம் காட்டியே தன்
பிள்ளை பசி ஓட்டிடுவாள்..

நடனாடும் இறை வடிவே
நாட்டமுள்ள சக்தி உருவே
படைப்பின் சாமி இவளன்றோ
பார் வியக்கும் தாய்மை அல்லோ..

இயங்கு நிலை இவள் செயல்
இணங்கி வாழ்தல் குணமது
கருவறை தந்த சாமியாம்
கருணையோடு காத்திடுவோம்..
சிவதர்சனி இராகவன்
15/5/2025

Nada Mohan
Author: Nada Mohan