16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
ஒளவை
பரவசம்
=======
மயங்கும் மாலை மனதை வருட
பயங்கள் மறந்த பதமான பொழுது
இயற்கை அழகில் இதயம் மிதக்க
சயனம் தாலாட்ட சந்தோச பரவசம்
முழுநிலா வானில் மெய்மறந்த வேளை
பழுதில்லா நிலவைப் பார்த்து இரசிக்கையில்
தொழுகின்ற கடவுளாய்த் தோன்றும் உருவுடன்
அழுவதும் சிரிப்பதும் ஆனந்த பரவசம்
தென்றல் காற்று தேகம் தீண்ட
இன்ப ஊற்று இதமாய்த் தூண்ட
அன்பு உள்ளம் அருகில் இருக்க
தன்னை மறந்து தங்கும் பரவசம்
அலைகள் கரையை அடித்துச் செல்ல
நிலைத்த கால்கள் நீரினில் புதைய
கனத்த சுமைகள் கரைந்து போக
மனது மகிழ்ந்து மிதக்கும் பரவசம்
அருவியின் ஓசையும் அழகிய வீழ்ச்சியும்
குருவிகள் இன்பமாய்க் குலவிடும் காட்சியும்
உருகிய உள்ளத்தில் உறைகின்ற வேளையில்
தருகின்ற பரவசம் தன்னிலை மறக்குமே.
ஒளவை.

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...