அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

ஒளியிலே தெரிவது

சக்தி சிறினிசங்கர்

தமிவ் மணம் கமழும் தேசத்தை நேசகத்த நெஞ்சங்கள்
கொஞ்சும் தமிழ் காக்கப் புறப்பட்ட வீரர்கள்
கனலிடை காற்றாய்ச் சென்றவர்கள்
தணலிடை வெந்த அக்கினிக் குஞ்சுகள்
புயலாகிப் புலியாகி புரட்சியின் ஒளியான புனிதர்கள்
ஒளிகொண்டு எழுந்திடுவர்
விழிநீர் மல்க வழிபடக் காத்திருப்போம்!
வளமான தேசம் அழகான தமிழீழம் அவர்களது கனவு ஒளிர்ந்திடும் தீபங்கள்!
நெஞ்சம் நெருப்பாகி நினைவு சுட்டெரிக்க
மண்ணுள்ளவரை மனங்களில் சுடர்விட்டெரியும்
மாவீரத் தெய்வங்கள்!

Nada Mohan
Author: Nada Mohan