ஓ’ முள்ளிவாய்க்காலே

வசந்தா ஜெகதீசன்
ஈர் எட்டாண்டாய் எரியும் நெருப்பு
ஈவிரக்கமற்றோர் செயலின் விதைப்பு
அடைக்கலமானோர் ஆகுதியானது

மறக்கத் தகுமா மனிதத்தின் கோரம்
மாண்டோர் உயிரின் கதறலின் கானம்
கண்ணீர் புகைக்குள் கருகி மடிந்தோர்
காயங்கள் சுமந்தே காணாமல் அழிந்தோர்

எண்ணற்ற வதைக்குள்
ஏதிலி வாழ்வு
வெந்தணலிட்டாலும் வேகாத நினைவு
முள்ளிவாய்க்கால் முற்றாகத் தகர்ந்தது
ஈழத்தின் தேசமே இரத்தமாய் பாய்ந்தது
ஈனர்கள் கொலையில் இருண்டது உலகு
வழிகளெங்குமே அவயத்தின் கூறு
பற்றியே எரியும் பாதையின் சுவடு

ஆண்டுகள் உருண்டாலும் அகலாத நெருப்பு
முள்ளிவாய்க்கால்
முற்றாகத் தகர்ப்பு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading