கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

ஓ’ முள்ளிவாய்க்காலே

வசந்தா ஜெகதீசன்
ஈர் எட்டாண்டாய் எரியும் நெருப்பு
ஈவிரக்கமற்றோர் செயலின் விதைப்பு
அடைக்கலமானோர் ஆகுதியானது

மறக்கத் தகுமா மனிதத்தின் கோரம்
மாண்டோர் உயிரின் கதறலின் கானம்
கண்ணீர் புகைக்குள் கருகி மடிந்தோர்
காயங்கள் சுமந்தே காணாமல் அழிந்தோர்

எண்ணற்ற வதைக்குள்
ஏதிலி வாழ்வு
வெந்தணலிட்டாலும் வேகாத நினைவு
முள்ளிவாய்க்கால் முற்றாகத் தகர்ந்தது
ஈழத்தின் தேசமே இரத்தமாய் பாய்ந்தது
ஈனர்கள் கொலையில் இருண்டது உலகு
வழிகளெங்குமே அவயத்தின் கூறு
பற்றியே எரியும் பாதையின் சுவடு

ஆண்டுகள் உருண்டாலும் அகலாத நெருப்பு
முள்ளிவாய்க்கால்
முற்றாகத் தகர்ப்பு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading