அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

கடலலை

நகுலா சிவநாதன்

கடலலை

விடாமுயற்சி உன்னில் கண்டேன்
விந்தை உலகின் வியப்பு கண்டேன்
சிந்தைக்குள்ளே தெளிவு கண்டேன்
சிறப்பாய் வாழத் தெரிந்துகொண்டேன்

முயற்சி என்ற முனைப்பாலே
முயலும் உலக வாழ்வினிலே
அயற்சி யில்லா நிலைகளிலும்
அயரா உழைப்பு வேண்டுமே!

கடலைப்போலே முயன்றிடு நீ
கனிவாய் ஓடி உழைத்திடு நீ
வரவுக்குள்ளே செலவுண்டு
வண்ண வாழ்வை அமைத்திடுநீ

அலைபோல் எண்ணம் பரந்துவர
அமைதி என்றும் நிலைத்து நிற்க
சிலையாய் இறைவன் அருளினிலே
சிந்தை உலகை வென்றிடுநீ

நகுலா சிவநாதன் 1815

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading