” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கடலலை

நகுலா சிவநாதன்

கடலலை

விடாமுயற்சி உன்னில் கண்டேன்
விந்தை உலகின் வியப்பு கண்டேன்
சிந்தைக்குள்ளே தெளிவு கண்டேன்
சிறப்பாய் வாழத் தெரிந்துகொண்டேன்

முயற்சி என்ற முனைப்பாலே
முயலும் உலக வாழ்வினிலே
அயற்சி யில்லா நிலைகளிலும்
அயரா உழைப்பு வேண்டுமே!

கடலைப்போலே முயன்றிடு நீ
கனிவாய் ஓடி உழைத்திடு நீ
வரவுக்குள்ளே செலவுண்டு
வண்ண வாழ்வை அமைத்திடுநீ

அலைபோல் எண்ணம் பரந்துவர
அமைதி என்றும் நிலைத்து நிற்க
சிலையாய் இறைவன் அருளினிலே
சிந்தை உலகை வென்றிடுநீ

நகுலா சிவநாதன் 1815

Nada Mohan
Author: Nada Mohan