கணப்பொழுதில்…

ரஜனி அன்ரன் (B.A) கணப்பொழுதில்…… 19.06.2025

சுதந்திரவானில் பறந்த உலோகப்பறவை
சுக்குநூறாகியதே கணப்பொழுதில்
தொடங்கும் போதே முற்றுப்புள்ளி
முடங்கியதே கனவுலகம் கண்முன்னே
இதயத்தைப் பிழிகிறது சோகம்
உலகே நடுக்கத்தில் மீளவில்லை இன்னும் !

ஒவ்வொரு உயிர்களுக்கும் பின்னால்
இதயத்தைப் பிழியும் துயரக்கதைகள்
கற்பனைகளைச் சுமந்தபடி கனவுகளில் மிதந்தபடி
கட்டியணைத்து உறவுகளுக்கு விடைகொடுத்தபடி
எதிர்காலம் நோக்கி தொடர்ந்தபயணம்
புதிராக நொடிப்பொழுதில் வெடித்துச் சிதறியதே !

கணப்பொழுதில் கண்ணிமைக்கும் நொடியில்
அரங்கேறிய அவலங்கள் ஆறவில்லை இன்னும்
பயணிகளின் பயணங்கள் கனவாகிப்போக
கருகிப் போனது உடலங்கள்
அடையாளம் காணமுடியாத சோகம்
ஆறாத்துயரத்தில் உறவுகளும்
அத்தனையும் கணப்பொழுதில்……..

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading