மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

கணப்பொழுதில்…

ரஜனி அன்ரன் (B.A) கணப்பொழுதில்…… 19.06.2025

சுதந்திரவானில் பறந்த உலோகப்பறவை
சுக்குநூறாகியதே கணப்பொழுதில்
தொடங்கும் போதே முற்றுப்புள்ளி
முடங்கியதே கனவுலகம் கண்முன்னே
இதயத்தைப் பிழிகிறது சோகம்
உலகே நடுக்கத்தில் மீளவில்லை இன்னும் !

ஒவ்வொரு உயிர்களுக்கும் பின்னால்
இதயத்தைப் பிழியும் துயரக்கதைகள்
கற்பனைகளைச் சுமந்தபடி கனவுகளில் மிதந்தபடி
கட்டியணைத்து உறவுகளுக்கு விடைகொடுத்தபடி
எதிர்காலம் நோக்கி தொடர்ந்தபயணம்
புதிராக நொடிப்பொழுதில் வெடித்துச் சிதறியதே !

கணப்பொழுதில் கண்ணிமைக்கும் நொடியில்
அரங்கேறிய அவலங்கள் ஆறவில்லை இன்னும்
பயணிகளின் பயணங்கள் கனவாகிப்போக
கருகிப் போனது உடலங்கள்
அடையாளம் காணமுடியாத சோகம்
ஆறாத்துயரத்தில் உறவுகளும்
அத்தனையும் கணப்பொழுதில்……..

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading