இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

கணப்பொழுதில்…

ரஜனி அன்ரன் (B.A) கணப்பொழுதில்…… 19.06.2025

சுதந்திரவானில் பறந்த உலோகப்பறவை
சுக்குநூறாகியதே கணப்பொழுதில்
தொடங்கும் போதே முற்றுப்புள்ளி
முடங்கியதே கனவுலகம் கண்முன்னே
இதயத்தைப் பிழிகிறது சோகம்
உலகே நடுக்கத்தில் மீளவில்லை இன்னும் !

ஒவ்வொரு உயிர்களுக்கும் பின்னால்
இதயத்தைப் பிழியும் துயரக்கதைகள்
கற்பனைகளைச் சுமந்தபடி கனவுகளில் மிதந்தபடி
கட்டியணைத்து உறவுகளுக்கு விடைகொடுத்தபடி
எதிர்காலம் நோக்கி தொடர்ந்தபயணம்
புதிராக நொடிப்பொழுதில் வெடித்துச் சிதறியதே !

கணப்பொழுதில் கண்ணிமைக்கும் நொடியில்
அரங்கேறிய அவலங்கள் ஆறவில்லை இன்னும்
பயணிகளின் பயணங்கள் கனவாகிப்போக
கருகிப் போனது உடலங்கள்
அடையாளம் காணமுடியாத சோகம்
ஆறாத்துயரத்தில் உறவுகளும்
அத்தனையும் கணப்பொழுதில்……..

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading