அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

கணப்பொழுது

செல்வி நித்தியானந்தன்
கணப்பொழுது (719)

கண்மூடி முழிப்பதற்குள்
எத்தனை அழிவுகள்
கண்ணெதிரே உயிர்கள்
எரியுண்ட ரணங்கள்

பற்பல நினைவுடனே
பறந்த உறவுகள்
பரிதாப விபத்தாலே
சிதறிய உடலங்கள்

இத்தனை இழப்பும்
கணப்பொழுதின் சோகம்
எரியுண்ட உடல்களும்
சிதறிய வேகம்

விதிஇதுவென மதியை
நோகத்தான் முடியுமா
சதிதான் இதுவென்று
இறைவனுக்கு தெரியுமா?

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading