கணப்பொழுது

செல்வி நித்தியானந்தன்
கணப்பொழுது (719)

கண்மூடி முழிப்பதற்குள்
எத்தனை அழிவுகள்
கண்ணெதிரே உயிர்கள்
எரியுண்ட ரணங்கள்

பற்பல நினைவுடனே
பறந்த உறவுகள்
பரிதாப விபத்தாலே
சிதறிய உடலங்கள்

இத்தனை இழப்பும்
கணப்பொழுதின் சோகம்
எரியுண்ட உடல்களும்
சிதறிய வேகம்

விதிஇதுவென மதியை
நோகத்தான் முடியுமா
சதிதான் இதுவென்று
இறைவனுக்கு தெரியுமா?

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading