கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன் .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின்...

Continue reading

கணப்பொழுது

செல்வி நித்தியானந்தன்
கணப்பொழுது (719)

கண்மூடி முழிப்பதற்குள்
எத்தனை அழிவுகள்
கண்ணெதிரே உயிர்கள்
எரியுண்ட ரணங்கள்

பற்பல நினைவுடனே
பறந்த உறவுகள்
பரிதாப விபத்தாலே
சிதறிய உடலங்கள்

இத்தனை இழப்பும்
கணப்பொழுதின் சோகம்
எரியுண்ட உடல்களும்
சிதறிய வேகம்

விதிஇதுவென மதியை
நோகத்தான் முடியுமா
சதிதான் இதுவென்று
இறைவனுக்கு தெரியுமா?

Nada Mohan
Author: Nada Mohan