“கணப் பொழுதினிலே”

நேவிஸ் பிலிப் கவி இல(458)

இக்கணம் எங்கேனும் இப் பூவுலகில்
ஒரு நொடிப் பொழுதினிலே
எதிர் பாரா ஏதோ ஓர் நிகழ்வு
நாளும் ஓர் அதிசயமாய்

செய்திகளும் சம்பவங்களும்
அதிர்ச்சியாய் ஆச்சரியமாய்
இன்பமாய் துன்பமாய்
ஏதாகிலுமாய்

உயிர் ஒன்று பிறக்க
உயிர்ஒன்று பிரியும்
புயலடித்தோயும்
பூகம்பம் நிகழும்

வான் வெளியினிலும்
கடல் பரப்பினிலும்
சாலை விபத்தினிலும்
நாளாந்தம் மடிவோரும்

ஏங்கித் தவிப்போரும்
அல்லலுற்றுழல்வோரும்
வையத்தில் வாடுவோரும் ஏராளமாக
ஒரு கணம் உனை வேண்டுகிறேன்
நிம்மதி தருவாயோ இறைவா!!!!!!!
நன்றி வணக்கம்…

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading